பசுவதை எதிர்ப்பு என்ற பெயரில் மாடுகளை விற்கச் செல்பவர் களை அடித்துக் கொல்வதும்; இஸ்லாமிய இளைஞனும், இந்துப் பெண்ணும் காதலித் தால் இந்துப் பெண்களை மதம்மாற்றும் “லவ்ஜிகாத்” என்று வதந்தி பரப்பி கலவரம் உண்டாக்கி முஸ்லீம்கள் மீது கொலை வெறியாட்டம் ஆடுவதையும்; வட மாநிலத்துச் செய்திகளாக பார்த்துவிட்டு சாதாரணமாக கடந்து போவதுண்டு. இச்செய்திகளின் பின்னுள்ள மதவாத அரசி யலைப் திரைக்கதையாக விரித்தால்...
சமீபத்தில் வெளிவந்துள்ள ஹிந்தி படம் “ஆஃப்வா”. இப்படத்தை பார்த்த பின்னரே, இச்செய்தியின் ஆழமும், வலியும் நம்மைப் பதற வைக்கிறது.
“ராஷ்டரிய விகாஸ் தள்” எனும் மாநிலக் கட்சி, மத்தியில் ஆட்சியிலுள்ள கட்சியுடன் கூட்டணி வைத்துத் தேர்தலை சந்திக்கிறது. இக்கட்சியின் மாநிலத் தலைவர் ஜியான் சிங். சபல்பூர் தொகுதியில் விக்கி என்பவன் இம்மதவாத கட்சியின் வேட்பாளர். கட்சித் தலைவரின் மகள் நிவி-ஐ திருமணம் செய்ய இருப்பவன்.
முஸ்லிம்கள் நிறைந்த பகுதியில் குறிப்பாக மாட்டுக்கறி விற்பனை செய்யும் பகுதியில், இவன் செய்யும் பிரச்சாரத்தால் கல்வீச்சு நடக்கிறது. மதக்கலவரம் ஏற்படு கிறது. விக்கியின் ஆள் சாந்தன் என்பவன், முஸ்லிம் கசாப்பு கடைகாரனை ஊடகக் காரர்கள் முன்னிலையிலே கொலை செய்து விடுகிறான்.
தொலைக்காட்சிகளில் இது பெரும் விவாதம் ஆகிறது. தேர்தல் வெற்றி மட்டு மின்றி, மாநிலக் கட்சியின் செல்வாக்கும் பாதிக்கும் நிலைமை ஏற்படுகிறது. இப்பாதகச் செயலால் நிவி, விக்கி மீது வெறுப்பும் கோபமும் கொள்கிறாள்.இவளது தந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், விக்கியுட னான திருமணத்தை விரும்பாமல், வீட்டை விட்டு வெளியேறுகிறாள்.
மாநிலக் கட்சியின் சரிந்த செல்வாக்கை சரிசெய்ய, கொலையாளி சாந்தன்-ஐ, மோதல் கொலை செய்ய உள்ளூர் இன்ஸ் பெக்டர் தோமர்-ஐ ஏற்பாடு செய்கிறது கட்சித்தலைமை.
அமெரிக்காவிலிருந்து இந்தியா திரும்பு கிறான் ரஹத் அகமது. இவன் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு விளம்பர யுக்திகளை வடி வமைத்து கொடுக்கும் நிபுணன்.இவனது மனைவி ஒரு இலக்கிய ஆளுமை.
இவள் ஜெய்பூரில் நடைபெறும் பிரசித்தி பெற்ற இலக்கிய விழாவில் பங்கெடுத்து வருகிறாள்.
அகமது, சபல்பூரில் உள்ள தன் மாமனாரை சந்தித்து விட்டு, ஜெய்பூர் இலக்கிய விழாவில், மனைவியின் புத்தக வெளியீட்டு நிகழ்வில் கலந்து கொள்ள உள்ளான்.
நிவி-ஐ திருமணம் செய்து கட்சித் தலை வரின் மருமகனாகி, அந்தஸ்து பெறும் கட்டா யத்தில் உள்ள விக்கி, நிவி-ஐ அடியாட்களு டன் தேடுகிறான். அவளை மடக்கி பிடிக்கும் வேலையில், அங்கு எதேச்சையாக வரும் அகமது, அறிமுகமற்ற நிவிக்கு உதவுகி றான்.
அகமதுவின் காரில் இருவரும் தப்பிக்கிறார்கள். மணமான அகமது என்ற முஸ்லீம், இந்து பெண்ணை கடத்தி விட்டான் என்றும், “லவ்ஜிகாத்” என்றும் வலைதளத்தில் வதந்தி பரப்புகிறான் விக்கி. கட்சித் தலைவரையும் இதனை ஆதரிக்க வேண்டிய கட்டாயத்தை உருவாக்குகிறான்.
விக்கி எதிர்பார்த்தபடி கலவரம் வெடிக்கி றது. இஸ்லாமியர்கள் உடைமைகளை விட்டுவிட்டு, உயிர் பிழைத்தால் போது மென்று ஓடுகிறார்கள். ஊரடங்கு போடப் படுகிறது.
இந்த நிலையில் தோமரின் கொலை முயற்சியிலிருந்து தப்பிக்கும் சாந்தன், கால்நடைகளை ஏற்றிச் செல்லும் இஸ் லாமியனொருவன் லாரியில் கிளீனராக வேஷமிட்டு தப்பித்து ஓடுகிறான்.
இதையறிந்த விக்கி, அந்த லாரியில் மாட்டுக்கறி கடத்துவதாக புரளியை வலைதளத்தில் கிளப்புகிறான். சங்கிகள் ஆயுதங்களோடு லாரியை தேடுகிறார்கள். அகமது, நிவி-ஐ ஒரு புறமும்; சாந்தனை இன்னொரு புறமும்; வெறிக்கும்பல் துரத்துகிறது.
இந்த துரத்துதல் படலத்தில், ஜெய்பூர் இலக்கிய விழாவில் அகமது தனது மனைவியை சந்தித்தாரா? நிவி மற்றும் சாந்தன் என்ன ஆனார்கள்?
பரபரப்பான திருப்பங்களுடனும், எதிர் பார்ப்புடனும் கூடிய பதிலை தந்துள்ளது “ஆஃப்வா”. கட்சித்தலைவர் ஜியான் சிங் மருத்துவ சிகிச்சையின்போது, மருத்துவ உதவியாளர் மார்பு முடியை சிரைப்பார்.
அப்போது போனில் விக்கியிடம், கட்சி புகழை காக்க, சாந்தனை முடிக்க அறிவுரை வழங்குகின் றார். இக்காட்சியில் சிரைக்கப்படும் மயிரை, உயிரின் படிமமாக ஊகிக்கமுடிகிறது.
நிவி, அகமது தப்பித்து ஓடுகையில், இளைஞனொருவன் நிவியிடம் லவ்ஜிகாத்துக்கு ஆதரவாக கேள்வி எழுப்பு கிறான். கோபமுற்ற நிவி,” வலைதளத்தில் வந்த செய்திகளை அப்படியே நம்பாதீர்கள்; செய்தியின் மெய்த் தன்மையை, மூளையை பயன்படுத்தி யோசித்து முடிவெடுங்கள்” எனக்கடிந்துகொள்வது காலத்துக்கேற்ற அறிவுரை.
அகமது அமெரிக்காவில் வசிக்கும் போது, ஒர் இந்தியனை இனவெறியர்கள் தாக்குகிறார்கள். அதனை எதிர்த்து தடுத்த தாகவும்; அந்த இனவெறி அகமது மனதை பாதித்ததால், உலகின் நம்பர்-1 நாட்டில் இரண்டாம் தரக்குடிமகனாக வாழ பிடிக்கா மல் இந்தியா திரும்பியதாக; இவனது விளம் பரத்துறை தொடர்பான சொற்பொழிவு களில் அடிக்கடி சொல்கிறான். தற்போது நிவி யோடு தப்பித்து ஓடுகையில் “அமெரிக்கா வில் இனவெறியர்களை தான் தடுக்க வில்லை என்றும், அந்நிகழ்வைப் பார்த்து பயந்து ஓடியதுதான் உண்மை; இதுவரை சொன்னது பொய்; ஒரு பொய்யைத் திரும்பத் திரும்ப சொல்லும் போது, நமது மனமே அந்தப் பொய்யை, உண்மை என நம்பத் தொடங்குகிறது.”என்று நிவியிடம் நிகழ்த்துகின்ற உளவியல் உரையாடல், முத்தானது.
சிறப்பான எடிட்டிங். படத்தின் வேகத் திற்கு இசை ஒரளவு உதவியுள்ளது.படத்தின் வேகத்தை குறைத்திடும் மான்டேஜ் பாட்டு தேவையற்றதாகவேபடுகிறது.
குடும்பச் சூழலின் தேவையைக் கருதி, தோமரின் மனசுக்கேற்றவாறு நடந்து கொள்ள வலியுறுத்தும் தாய்; தன் உடலை மட்டுமே மோகிக்கும் போலீஸ் அதிகாரி தோமர்- இப்படி எல்லா கசப்பான உணர்ச்சி களையும் சுமக்கும் பெண் போலீஸ். இருந்தும் கூட அவற்றை சகித்து, இறுக்கமான முகத்தில் காணப்படும் அவள், இறுதியில் அகமது உயிரை தோமரிடமிருந்து காப்பாற்றுகிறார். அதன் மூலம் தனது குற்ற உணர்விற்கு நியாயம் சேர்த்து தன் முகபாவனைகளில் மிளிர்கிறார்,பெண் போலீஸாக நடித்துள்ள நடிகை டி.ஜெ.பானு.
ஹிந்தி உலகின் லெஜண்டான மறைந்த இர்ஃபான் கான் இடத்தை நிரப்பக்கூடிய, நிஜாமுதீன் சித்திக்கின் நடிப்பு பசிக்கு சரியான தீனி இயக்குநரால் வழங்கப்பட வில்லை. நிவியாக தோன்றிய பூமி படேனே கர் நடிப்பு பாராட்டுக்குரியது. இதர நடிகர்கள் அனைவரும் குறைவற்ற நடிப்பைத் தந்துள்ளனர்.
இன்றைய அரசியல் சூழலில் பெரும் பான்மை மதவெறியை படமாக்குவதற்கு பெரும் தைரியம் வேண்டும்.அந்த வகையில் படத்தின் இயக்குநர் சுதிர் மிஷ்ரா மிகுந்த பாராட்டுக்குரியவர். மதவெறுப்பு அரசியல் எவ்வாறு விதைக்கப்படுகிறது;
இணையவழிச் செய்தி உருவாக்கலில் உள்ள நுண் சார்பு அரசியல்; போன்றவற்றை தெளிவாகவும் கூர்மை யாகவும் விவரித்துள்ளது இப்படம்.